Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : தொல்காப்பிய சொல்லதிகாரமும் தொல் வரிவடிவவியலும்: ஓர் அகராதியியல் நோக்கு
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 14-21
Affiliation(s) : Assistant Professor

Abstract :

தொல்காப்பியரின் வரிவடிவக் கோட்பாட்டையும் தமிழிக் கல்வெட்டாவணங்களையும் எழுத்தியல் அடிப்படையில் ஒப்பிட்டு அணுகும் போது இவ்விரு சான்றுகளும் தம்மளவில் வரிவடிவ அடிப்படையில் ஒத்துக் காணப்படவில்லை. தொல்காப்பியர் எழுத்துக்களுக்கான (Letters) வரிவடிவங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எல்லா எழுத்துக்களுக்கான வரிவடிவங்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில எழுத்துக்களுக்கான வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் எழுத்துக்களை உயிர், மெய், சார்பு என்ற மூன்று வகையாகப் பகுத்துள்ளார். மேலும் உயிர் எழுத்துக்களில் எகர, ஒகரம் புள்ளி பெறும் என்றும் மெய்யெழுத்துக்களில் எல்லா மெய்யெழுத்துக்களும் புள்ளி பெறும் என்றும், சார்பெழுத்துக்களில் குற்றியலுகரம் புள்ளிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இம்முறைகள் தமிழிக் கல்வெட்டாவணங்களில் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை.


Keywords : கல்வெட்டியல்
Document Type : Research Paper
Publication date : June 02, 2020