Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : குறுந்தொகையில் இயற்கையின் கேட்புத்திறன்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 67-76
Affiliation(s) : Assistant Professor

Abstract :

சங்க காலத்திலிருந்து தலைவன் கூறுவதைத் தலைவி கேட்பவளாகவும், தலைவன், தலைவி கூறுவதை வாயில்கள் கேட்பவர்களாகவும், பார்ப்பார், அறிவர் கூறுவனவற்றை எல்லோரும் கேட்பவர்களாகவும். இலக்கியங்களும், இலக்கணங்களும் படைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மக்கள் அல்லாத இயற்கையும் மனிதர்கள் கூறுவனவற்றிற்கு செவிமடுக்கும் என்பதன் அடிப்படையில் மக்கள் கூறும் கருத்துகளை இயற்கை கேட்பதாக இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எவை எவை கேட்கும் தன்மை உடையவை என்பதைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில் குறுந்தொகையில் எந்தெந்த இயற்கைக் கூறுகளை கேட்புத்திறனுக்குப் பயன்படுத்தியுள்ளனர், அவற்றின் சிறப்புத் தன்மை என்ன? என்பதை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.


Keywords : சங்க இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018