Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : கதைசொல்லலில் தமிழவனின் உத்திமுறைகள்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 18-26
Affiliation(s) : Assistant Professor

Abstract :

புதிய சிந்தனைகள் தோன்ற வேண்டும் மரபும் காக்கப்படவேண்டும். அப்பொழுதான் மொழியும் அம்மொழி பேசும் மக்கள் கூட்டமும், அம்மக்கள் கூட்டத்தைக் கொண்ட பரந்த நிலப்பரப்பு / நாடு வளர்ந்த / வளம்பெற்ற ஒன்றாகக் கருதப்பட முடியும். வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு புதியதை மட்டு கொண்டு செயல்படுவது வளர்ச்சி என்று கொள்ள முடியாது. வேண்டுமானால் வீக்கம் என்று கூறலாம். வளர்ச்சி என்பது பரந்த அளவில் நிகழ்வதைத் தான் குறிக்கும். மொழியின் வளர்ச்சி / மாற்றம் என்பது வெறும் ஒலியில் அல்லது சொல்லில் / தொடரில் என நிகழும் மாற்றங்கள் என்று சுருக்கிக் கொள்ள முடியாது. அது அம்மொழி பேசும் மக்களின் அகத்தில் உருவான மாற்றங்களின் புறவெளிப்பாடுகள். இத்தகைய இந்த வெளிப்பாடுகள் நெடுங்காலமாய்த் தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகிறது. அவ்வாறான நிகழ்வுகள் புதிய வெளிச்சத்தை நோக்கி சமுதாயத்தை நகர்த்திச்சென்றதையும் / செல்வதையும் தமிழிலக்கிய வரலாற்றில் அறியமுடிகின்றது.


Keywords : இக்கால இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018